கார் ஒன்று மற்றுமொரு கார் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரகம – களுத்துறை வீதியில் கல்துடே பகுதியில் இன்று (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. களுத்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்த காரின் சக்கரம் கல்துடே பாலத்திற்கு அருகில் வைத்து உடைந்துள்ளது. பின்னர் எதிரே வந்த மற்றுமொரு கார் மற்றும் முச்சக்கர வண்டியுடன் குறித்த கார் மோதியுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்தவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website