ஜய ஸ்ரீ இசைக்குழுவைச் சேர்ந்த இருவருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.
ஜய ஸ்ரீ இசைக்குழு பாடிய ‘மொட் கொவியா’, ‘சுந்தரியே’ ஆகிய ஆல்பங்களில் இருந்து 20 பாடல்களை பாடுவும், விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் அதன் உறுப்பினர்களான ரோஹித ஜெயலத் மற்றும் ரோஹன ஜெயலத் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இசைக்குழுவின் உறுப்பினரான அருண லியனகே செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.