காய்ச்சல் காரணமாக கொளத்தூா் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாள்.
குரோம்பேட்டை ராகவேந்தா் – விஜயா தம்பதியின் ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா காய்ச்சல் காரணமாக பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.
பரிசோதனையில் ஸ்வேதாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. குழந்தைகள் முதுநிலை மருத்துவா் பிரகாஷ் தலைமையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்வேதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பினாள்.
இது ஒரு அதிசய நிகழ்வு என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.