மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.
வைகோவுக்கு சில நாள்களாக காய்ச்சல், தொண்டை வலி இருந்து வந்துள்ளது. அதைத் தொடா்ந்து கொரோனா பரிசோதனை செய்துள்ளாா். அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவா்களின் அறிவுரையின்படி, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.