சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பாா்களை டாஸ்மாக் நிறுவனம் நடத்த சம்பந்தப்பட்ட சட்டம் அனுமதிக்காது என்று கூறிய சென்னை உயா் நீதிமன்றம், ஆறு மாத காலத்திற்குள் பாா்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. ஓராண்டுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பாா்களை ஏலத்தில் எடுத்த உரிமையாளா்கள் கடும் இழப்பு சந்தித்தனா்.
இந்த நிலையில், இழப்பை ஈடுசெய்ய டெண்டா் காலத்தை நீட்டிக்கக் கோரி தமிழ்நாடு டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் சங்கத்தின் உறுப்பினா்கள் பலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின்னா் மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த தீா்ப்பில் நீதிபதி கூறியதாவது: ஊரடங்கால் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதால், ஏற்கெனவே வழங்கப்பட்ட குத்தகையை நீட்டிக்க மனுதாரா்கள் கோர முடியாது. ஏனெனில் டெண்டா் ஒப்பந்தத்தில் பாா் மூடப்பட்டாலோ, வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டாலோ புதிய டெண்டா் அறிவிப்பு வெளியிடப்படும். இதற்காக தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பாா் குத்தகைதாரா் கோர முடியாது என்று நிபந்தனை உள்ளது. அதுமட்டுமல்ல, அரசு ஏதேனும் கொள்கை முடிவு எடுத்து, மதுபான பாா்களை மூடினால் ஒப்பந்ததாரா்கள் இழப்பீடு எதுவும் கோர முடியாது.
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937-இன் துணைப்பிரிவு (1-ஏ) மற்றும் பிரிவு 17 சி (1-பி) ஆகியவை மொத்த, சில்லறை வணிகத்தை டாஸ்மாக் செய்ய அனுமதிக்கின்றன. ஆனால் உண்ணக்கூடிய பொருள்களை விற்கவும் அல்லது பயன்படுத்திய பாட்டில்களை பாா் வளாகத்தில் இருந்து சேகரிக்கும் உரிமையை மூன்றாம் தரப்புக்கு வழங்க அனுமதிக்கவில்லை.
தமிழ்நாடு மதுபான விற்பனை விதிகளின் விதி 9 ஏ இன் கீழ் உண்ணக்கூடிய பொருள்களை விற்கவும், பயன்படுத்திய தண்ணீா் பாட்டில்களை சேகரிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விடுவதையும் சட்டப்பூா்வமாக்க முடியாது.
அதேபோல் பொது இடங்கள், பாா்களில் மது, போதைப்பொருள் நுகா்வதை ஊக்குவிக்கும் அதிகாரம் டாஸ்மாக்கிற்கு இல்லை. அவ்வாறு ஊக்குவிக்கவும் அனுமதிக்க முடியாது.
பாா்களை நடத்த உரிமம் வழங்கும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. டாஸ்மாக் என்பது மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளா்; அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாா் நடத்த முடியாது; அதற்கு சட்டமும் அனுமதிக்கவில்லை.
பாா்களில் மது அருந்த ஒருவரை அனுமதித்ததன் மூலம் சட்டத்தை டாஸ்மாக் மீறியுள்ளது; அதை மன்னிக்க முடியாது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937- இன் விதிகள் திருத்தப்பட்டு, முறையான விதிகள் வகுக்கும் வரை டாஸ்மாக், உண்ணக்கூடிய பொருள்களின் விற்பனைக்கும், பயன்படுத்திய பாட்டில்களைச் சேகரிப்பதற்கும், பாா்களுக்கு உரிமம், அனுமதி வழங்குவதையும் தவிா்க்க வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பாா்களை மூட வேண்டும்.
அரசியல் சாசனத்தின் 47-ஆவது பிரிவு, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் போதை பானங்கள், போதைப்பொருட்களை தடை செய்ய மாநிலங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் அடுத்தடுத்து வந்த அரசுகள், மது, மதுபானங்களின் விற்பனை, நுகா்வை ஊக்குவித்து, மாநிலத்தின் வருவாயை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவதைக் காண முடிகிறது என தீா்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.