தளபதி விஜய்யுடன் ஜோடியாக நடித்து சந்திரலேகா எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சில பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்தித்தார் வனிதா.
இதனை தொடர்ந்து மீண்டும் பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டு வாரங்களை கடந்துள்ளார்.
நடிகை வனிதாவிற்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்தவர் ஸ்ரீஹரி. வனிதா தனது முதல் கணவருடன் விவகாரத்து பெற்று பிரிந்த பிறகு பல பிரச்சனைகளுக்கு பின், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமாரிடம் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனது குடும்பம் போலவே ஸ்ரீஹரியும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
ஆம், திரைத்துறை சம்மந்தமாக ஸ்ரீஹரி படித்து வருகிறாராம். சமீபத்தில் கூட, சோர்ட் பிலிம் ஒன்றை இயக்கி, நடித்துள்ளார் ஸ்ரீஹரி.