நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அட்மிட் ஆக சிகிச்சை பெற்றார் அவர்.
கொரோனாவில் இருந்து மீண்ட அவர் தனது ஆல்பம் பாடலை இயக்கும் பணிகளில் பிசியாக இருந்தார். Musafir என்ற அந்த பாடல் நாளை தான் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா திடீரென மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.
அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டு இருக்கிறார். தனக்கு ஜுரம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதனால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருக்கிறார் அவர். ஐஸ்வர்யா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.