தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் சட்டசபை தேர்தலைப்போல பரபரப்பாக நடந்து முடிந்தது.
இதில் பல வருடங்களாக தலைவர், பொதுச்செயலாளர் பதவியிலிருந்த சரத்குமார், ராதாரவி அணிக்கெதிராக நின்ற இளம் நடிகர்களான விஷால் அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்த அணி உருவாவதற்கு காரணமே நடிகர் சங்கத்தில் இருந்த சில குளறுபடிகள் தான். இதுபற்றி சரியான விளக்கம் அளிக்காமல் கேள்வி கேட்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து ராதாரவி அணியினர் பேசி வந்தனர்.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கமல், சிவக்குமாருக்கெதிரான சரத்குமாரின் பேச்சும் இந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் விஷால் அணியினரின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை விட சரத்குமார் அணியினரின் நாவடக்கம் இல்லாத பேச்சால் தான் பாண்டவர் அணி வெற்றி பெற்றதாக சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து வேகமாக பரவி வருகிறது.