சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பெண் வெள்ளை புலி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
நேற்றிரவு (23) 13 வயதுடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உடல்நலகுறைவால் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இப்பூங்காவில் பிறந்த இந்த பெண் வெள்ளை புலி கடந்த இரண்டு வாரங்களாக ‘அட்டாக்சியா’ எனப்படும் கை, கால்களில் ஏற்படும் தசை சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த புலி, கடந்த இரு தினங்களாக சரிவர உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது.