தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அனைவரும் எதிர்பார்க்கும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல்முறையாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அவரின் 66-வது திரைப்படமாக உருவாகும் அப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வரவில்லை.
இதனிடையே தற்போது தளபதி விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி தளபதி 66 திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தளபதி விஜய்க்கு நேரம் கிடைத்துள்ளதாம். இதனால் நீண்ட நாளாக சந்திக்காமல் இருந்த லயோலா கல்லூரி நண்பர்களைச் சந்திக்கிறார் விஜய்.
தினமும் பத்து பேரோடு இந்த சந்திப்பு அவரின் கொட்டிவாக்கம் வீட்டில் நடக்கிறதாம், தொழிலில் முடங்கியிருக்கும் அவரின் நண்பர்களுக்கு பொருளாதார உதவியை விஜய் செய்து வருகிறாராம்.
இதனால் சந்தோஷத்தில் இருக்கும் அவரின் கல்லூரி தோழர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது சந்தித்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளார்களாம்.