ஒருகாலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன், பின்னர், தீபக் பாகா என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண பந்தத்தில் இணைந்த சிம்ரன், அதன்பிறகு நடிப்பதை ஓரங்கட்டினர்.
சமீபத்தில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த சிம்ரன், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சிம்ரனின் கணவர் தீபக் பாகா, சின்னத்திரையில் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுள்ளார். இவர் தற்போது வெள்ளித் திரையிலும் தனது காலடியை பதித்துள்ளார்.
‘சிம்ரன் & சன்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். இந்நிலையில், இவருடைய முதல் தயாரிப்பில் உருவாகும் படத்தை கௌரிசங்கர் என்பவர் இயக்கவுள்ளார்.
கௌரிசங்கர், பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரபல நட்சத்திரங்களை வைத்து நிறைய விளம்பர இயக்கியவர். இவர் இயக்கும் அந்த புதிய படத்தில் சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும், இந்த படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.