மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஹெரோயின், ஐஸ் போதை பொருள், கஞ்சா, போதை மாத்திரைகளுடன் போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாழைச்சேனை கோவில் வீதியில் வைத்து போதை பொருள் வியாபாரியை மடக்கிபிடித்து கைது செய்த அவரிடமிருந்து 200 மில்லி கிராம் ஹெரோயின், 200 மில்லி கிராம் ஜஸ் போதை பொருள், 1120 மில்லி கிராம் கஞ்சா, 4 போதை மாத்திரைகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.