அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்பகஸ்தோவ பொலிஸாரால் நேற்று (27) சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கட்டுகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது தாய் வீட்டிற்கு அருகில் தான் வசித்து வந்த வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த குறித்த பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.