பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் இராணுவ வீரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வினால் அந்த இடத்தில் பெறும் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நேற்று பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதி தடுப்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடாக சென்ற இராணுவ மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.