நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். வீட்டில் மின்சாரம், எரிவாயு, எரிபொருள் இல்லாதபோது, மக்கள் அந்த அழுத்தத்தை வௌிப்படுத்துவது நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு அரசியலமைப்பே ஒரே தீர்வு என கடந்த காலங்களில் கூறியவர்கள் அரசியலமைப்பிற்கு புறம்பாக தீர்வுகளை காண முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website