கொம்பனிதெரு பகுதியில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இந்திய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டின் மேற்கூரையை சீர் செய்யும் பணியின் போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். பின்னர் குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 22 வயதான இந்திய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கட்டுமான தளத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது. கொம்பனிதெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website