நாட்டின் இருவேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலன்னறுவை, கணங்கொல்ல பிரதேசத்தில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பொலன்னறுவை நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. குறித்த நபர் கடந்த 4 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக அவரது மனைவி கடந்த 6 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கட்டுகஸ்தோட்டை நவயலத்தென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 77 வயதுடைய மஹவெல, நவயலத்தென்ன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website