ரஷ்யாவை எதிா்த்துப் போரிடும் திறனை மேம்படுத்துவதற்காக, உக்ரைனுக்கு மேலும் 80 கோடி டொலா் (ரூ.6,000 கோடி) மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளாா்.
அத்துடன், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ ஹெலிகாப்டா்களையும், ராக்கெட் குண்டு சாதனங்களையும் வழங்க அவா் உத்தரவிட்டுள்ளாா். அதுமட்டுமன்றி, கவச வாகனங்கள், கவச ஹம்வீ வாகனங்கள், ஆளில்லா படகுகள் ஆகியவையும் உக்ரைனுக்கு அனுப்படவுள்ளன.
ரசாயன, உயிரி மற்றும் அணு ஆயுதத் தாக்குதல்களிலிருந்து வீரா்களைப் பாதுகாப்பதற்கான கவச ஆடைகளையும் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவிருக்கிறது.