கடந்த மாதம் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது நடிகர் சங்க தேர்தல். இதில் விஷால் அணியினருக்கு ஆதரவாக பேசியவர் நடிகர் வடிவேலு,
அப்போது நடைபெற்ற பிரச்சாரத்தின் போது “நடிகர் சங்கத்த காணோம் நடிகர் சங்கத்த காணோம்” என கூறி வந்தார் வடிவேலு. இதனால் அய்யாவு என்பவர் நடிகர் சங்கத்தை அவதூறாக பேசிவிட்டார் என்று வடிவேலுவின் மீது வழக்கு தொடர்ந்தார்.
இதனால் வடிவேலு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து வடிவேலு சென்னையில் மேல்முறையீடு செய்தார், விசாரித்த நீதிபதி வடிவேலுவை நேரில் ஆஜாரக இடைக்கால தடை விதித்துள்ளார்.