மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் என இரு புதிய பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இவைகளின் விலை ரூ.3,700 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் சிம் விற்பனை அடுத்த மாதம் துவங்குகின்றது. மற்ற சந்தைகளில் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த கருவிகள் அந்நிறுவனத்தின் அசிதகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது.
அதிக தரம் வாய்ந்த இண்டர்நெட் வசதி கொண்ட பீச்சர் போன்களாக இந்த கருவிகள் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாக 2 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளசோடு இரு கேமராக்களிலும் எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
இவைகளோடு நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் சிம் கருவிகளிலும் அலுமினியம் கவர் பொருத்தப்பட்டுள்ளது. இரு கருவிகளின் சிறப்பம்சங்களை பொருத்த வரை சிம் கார்டு ஸ்லாட்களை தவிற வேறு மாற்றங்கள் இல்லை என்பதோடு இவை இரண்டும் நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளம் கொண்டே இயங்குகின்றது.
நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் 2.8 இன்ச் QVGA (240×320 பிக்சல்) எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் நீட்டிக்கும் மெமரி சுமார் 32 ஜிபி வரை வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை GPRS/ EDGE, ப்ளூடூத் வி3.0, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா பேட்டரிகள் அதிக பேக்கப் வழங்கும் என்பதற்கேற்ப மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த கருவிகளில் 1200 எம்ஏஎச் பேட்டரி வழங்கியுள்ளது. இதில் டூயல் சிம் கருவியானது 23 மணி நேர டாக்டைம் மற்றும் சிங்கிள் சிம் கருவி சுமார் 27 மணி நேர ஸ்டான்ட்பை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு கருவிகளும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.