சிம்பு பாடிய பீப் சாங் தான் தமிழகத்தின் தற்போதைய தலைப்பு செய்தி. இந்நிலையில் அனிருத் இப்பாடலுக்கு இசையமைக்கவில்லை என கூறிவிட்டார்.
அனிருத் தரப்பில் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சிம்பு தரப்பில் காவல் துறையில் ஆஜராக இன்னும் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர்.
ஆனால், இவை இரண்டிற்கும் காவல் துறை மறுத்துள்ளது. விசாரணைக்கு பின்பு அனிருத்தை விடுவிக்க முடியும், சிம்புவிற்கு அத்தனை நாட்கள் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.