பீப்பாடல் விவகாரம் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கோவையில் தனியார் ஜவுளி நிறுவன நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகை சினேகாவிடம் செய்தியாளர்கள் பீப் பாடல் குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், இதுவரை பாடல் கேட்கவில்லை, பாடல் கேட்காமல் விமர்சனம் செய்வது சரியில்லை.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல்கள் தொடர்ந்து வருகிறது. படைப்பாளிகள் சமுதாயத்துக்கு நல்ல பாடலை கொடுக்க வேண்டும் என்றும், பீப் பாடல் போன்றவற்றை திணிக்க வேண்டாம் என்றும் கூறினார்.