புதுமுகங்கள் ஜீவரத்னம், ஈஷான்யா நடித்து வருகிற புத்தாண்டில் வெளியாகவிருக்கும் படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. இப்படத்தை இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்மணி என்பவர் இயக்குகிறார். இவர் தெலுங்கில் நான்கைந்து படங்களை இயக்கியுள்ளார். தற்போது ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
இப்படத்தில் தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திகில் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார். மல்லிகார்ஜின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீ சாய் சர்வேஷ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை உலகம் முழுவதும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.