சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என உலகம் முழுவதிலும் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாத ஆட்களை நாம் பார்க்க முடியாது. வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ, ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும் அதை கையாண்டு வருகின்றனர்.
தற்பொழுது, இந்த நேரத்தில் ஃபேஸ்புக்கை பிகாரில் கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்ற ஆச்சரியம் தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக்கை. அதிலும், குறிப்பாக பத்தாவது படிக்கும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். பிகார் அரசு, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், பத்தாம் வகுப்பு தேர்வை எந்தவித அச்சமுமின்றி சந்திக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள், தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் உள்ளிட்டதகவல்களை ஃபேஸ்புக் மூலம் கேட்டுக் கொள்ளலாம் என்று பிகார் மாநில கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 16 லட்சம் மாணவர்கள் 2016-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கின்றனர். இந்த முயற்சி பிகாரில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர்.
தமிழகத்திலும் முகநூலை வெறும் பொழுதுபோக்கு தளமாக பயன்படுத்தாமல் இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்தினால், மாணவர்களின் எதிர்காலத்தில் அது நல்ல மாற்றத்தை உண்டாகும் என்று நம்பலாம்.