எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை மொனராகலை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை நீண்ட வரிசை காணப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டவர்களை தவிர ஏனையவர்களுக்கு கொள்கலன்களில் எரிபொருள்
நாளை (18) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இன்று (17) பிற்பகல் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளாந்த தேவை மற்றும் மின் உற்பத்தியை ஆராய்ந்த பின்னர் மின்வெட்டு தொடர்பில் இறுதித் தீர்மானம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் இன்று பிற்பகல் (17) மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையின் முதல்
மோட்டார் சைக்கிளின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தம்புள்ளை வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த வீரசூரிய இடமாற்றப்பட்டுள்ளார். அதனடிப்படையில் வடக்கு மாகாண
அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைந்துக் கொள்ளுதல் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடு பூராகவும் உள்ள அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கு
கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (17) ஆராதனையின் பின்னர்
அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.