உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற நாடு வடகொரியா. அந்த நாடு, அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை நடத்தி இருப்பதாக கடந்த 6-ந் தேதி அறிவித்து, உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளானது.
அந்த வடகொரியா ஒரு புதுவகையான மதுபானத்தை கண்டுபிடித்திருப்பதாக இப்போது அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த மதுபானத்தை குடித்தால் தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படாது என வடகொரியா கூறுகிறது.
அதிகளவில் மருத்துவ குணங்கள் கொண்ட ‘கெசோங் கோர்யோ இன்சாம்’ என்ற மூலிகை, ஈரமில்லாத அரிசி ஆகியவற்றை கொண்டு இந்த ‘கோர்யோ’ மது தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடகொரியா விஞ்ஞானிகள் ‘கும்டாங்-2’ என்ற ஊசி மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும், அது எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணமாக்கும் என கூறியதும், நினைவுகூரத்தக்கது.