மும்பையில் யாஷ் சோப்ரா நினைவு தேசிய விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் மூத்த நடிகை ரேகாவுக்கு இந்த விருதை மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் வழங்கினார். இந்த விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு, தங்க காப்பு (பிரேஸ்லெட்) ஆகியவையும் வழங்கப்பட்டன.
அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசுகையில், “நடிகை ரேகா சிறந்த நடிகை மட்டுமல்ல. மனித நேயம் மிக்கவர். ஹாலிவுட் படங்களை விட இந்திய படங்களுக்கு உலக அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதை பயன்படுத்தி பாலிவுட் பட உலகினர் இந்திய சினிமாவை உலக தரத்துக்கு முன்னேற்ற வேண்டும்” என்றார்.
விழாவில் திரையுலக பிரமுகர்கள் சத்ருகன் சின்கா, சுப்பராமி ரெட்டி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, போனி கபூர், ரன்பீர் சிங், சுபாஷ் கய், மோகன் பாபு உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த விருதை ஏற்கனவே லதா மங்கேஷ்கர், அமிதாப்பச்சன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.