குடியரசு தினமான இன்று மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.
‘இந்தியாவின் சுதந்திர போராட்டம் இன்றளவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதற்கு மரியாதை செலுத்துவது என்ற ஒன்று தான் அதனை பாதுகாப்பதற்கான, உலக தரத்தில் உருவாக்குவதற்கான வழி.’ என்று கமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் இசைஞானி இளையராஜா இசையமைத்து அவர் பாடிய தேசிய கீதம் பாடலையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல் டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதற்கு அவரது மகள் சுருதி ஹாசன் முதலில் வாழ்த்துத் தெரிவித்தார். அதோடு தன்னுடைய வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான தருணம் இது எனவும் சுருதி ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.