மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2–வது முறையாக டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் முதல் 4 பந்துகளில் தொடர்ந்து 4 சிக்சர்கள் பிராத்வெய்ட் அடித்ததும் தலையில் கையை வைத்தபடி மைதானத்தில் அதிர்ச்சியில் அமர்ந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் இது குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், ‘கடைசி ஓவர் எனக்கு மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளித்தது. இருந்தாலும் அதற்கு பிறகும் எனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே, எனது நாட்டுக்காக உலக கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடியதற்காக பெருமைப்படுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சிறப்பான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.