அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் பிரன்னா சைக்ஸ் (வயது 19). இவர் திருமணமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருடைய வயிறு வழக்கத்தை விட பருமனாக இருந்தது. இதனால் குழந்தையை இயற்கையாக பெறுவது கடினம் என டாக்டர்கள் முடிவு செய்தனர்.
எனவே பிரசவ வலி ஏற்படுவதற்கு முன்பாக சிசேரியன் ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஆபரேசன் செய்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த குழந்தை வழக்கமான குழந்தைகள் போல் இல்லாமல் மிகவும் தடினமனாக அதிக எடையுடன் இருந்தது. 5 கிலோ 900 கிராம் எடையுடன் குழந்தை காணப்பட்டது.
வழக்கமாக குழந்தைகள் 2.5 கிலோவில் இருந்து 3 கிலோ வரை எடை இருக்கும். ஆனால் இந்த குழந்தை இவ்வளவு அதிக எடை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு அதன் காரணமாக குழந்தை தடினமாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் குழந்தையை பரிசோதித்தபோது அது நல்ல ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.
மரபணு காரணமாக குழந்தை அதிக எடையுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த குழந்தை 6 கிலோ எடை இருந்தாலும் கூட இதைவிட அதிக எடை கொண்ட குழந்தைகளும் உலகில் பிறந்துள்ளன. 1955ம் ஆண்டில் இத்தாலி நாட்டில் ஒரு பெண்ணுக்கு 10 கிலோ 200 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. இதுதான் உலகத்திலேயே அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.