நடிகை நமீதா சட்டசபை தேர்தலுக்கு முன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அரசியலில் குதித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நமீதா குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவர்களைப் பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது அவரை நிருபர்கள் சந்தித்தனர். தேர்தல் வெற்றி குறித்து கருத்து கேட்டனர்.
நமீதா கூறுகையில், தமிழ் நாட்டில் முதல்–அமைச்சர் அம்மா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்தது. அம்மா தான் ஜெயிப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்தனர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நான் என் குடும்பத்தினருடன் திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்து வேண்டுதல் நிறைவேற்றினேன் என்றார்.
அ.திமு.க. சார்பில் மேல்– சபை எம்.பி. ஆவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு நமீதா பதில் அளிக்காமல் சென்று விட்டார்.