வடக்கு ஜப்பானின் மலைபகுதியில் காணாமல் போன சிறுவனின் பெற்றோர், அவனை தண்டிப்பதற்காக, காட்டில் அவனை தனியாக விட்டு வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
வனக் கரடிகளின் இருப்பிடமாக கருதப்படும் வடக்கு ஒகாய்டோவில் அச்சிறுவனின் பெற்றோர் அவனை தனித்து விடப்பட்ட நாளிலிருந்து இரண்டு நாட்களாக அவனை காணவில்லை.
முதலில் அச்சிறுவனின் பெற்றோர் தாங்கள் காட்டில் விளையும் காய்கறிகளை தேடிச் செல்கையில் அச்சிறுவன் காணாமல் போனதாக போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தனது மகனை தனியாக விட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். அச்சிறுவனை விட்டுவிட்ட பிறகு திரும்ப அழைத்து செல்வதற்காக ஐந்து நிமிடங்கள் கழித்து வந்து பார்க்கையில் அவன் காணாமல் போய்விட்டான் என தெரிவித்துள்ளனர்.