தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவிற்கு ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. சினிமா மட்டுமின்றி சமூக நல பணிகளிலும் சூர்யா ஈடுபடுவதால், அவரை இளைய தலைமுறை ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில், சூர்யா ரசிகரான சபரீசன் என்பவர் சென்னையில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். பலருக்கும் வருத்தத்தை தந்த இது பற்றி அறிந்த சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் ட்விட்டர் அக்கவுண்டின் Profile Picture´ஐ கருப்பு நிறத்தில் வைத்து, சபரீசனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.