நடிகர் சாந்தனு மற்றும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தி ஆகியோர் சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. காதலித்து வந்த இவர்கள், இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் விவாகம் செய்து கொண்டனர்.
தற்போது, கீர்த்தி மெஹெந்தி விழாவின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாந்தனு. அதில் கீர்த்தியின் கையில் அவர் எதையோ தேடுவது போல ஒரு படம் உள்ளது.
அது என்ன என்று பார்த்தால்…. கீர்த்தி போட்டுள்ள மருதாணியில் தன் பெயர் எங்கு உள்ளது என்பதை தான் இவ்வளவு சிரத்தையாக தேடிக்கொண்டிருக்கிறாராம்.