மது அருந்தி கார் ஓட்டிச் சென்று பொலிசாரின் வாகனத்தில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார்.
அப்போது, அருண் விஜய் தனது காரை அதிவேகமாக ஓட்டி வந்த அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த பொலிசாரின் வாகனத்தின் மீது மோதினார். இதில் அருண் விஜய் எவ்வித காயங்கள் இன்றி தப்பினார்.
ஆனால் பொலிஸ் வாகனம் சிறிது சேதமடைந்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மது அருந்தி கார் ஓட்டியது தெரியவந்தது.
உடனே அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ர