சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் சமீபத்தில் தன் கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யவுள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதிலிருந்து மீண்டு வரும் சௌந்தர்யா கோச்சடையானை அடுத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என படத்திற்கு பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கபாலிக்கு பிறகு கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் நடிப்பதற்கு புதுமுக நடிகர், நடிகைகளை எதிர்பார்க்கிறார்கள்.
திறமையுள்ளவர்கள் தங்களுடைய புகைப்படத்தையும், விபரத்தையும் அனுப்பி வைக்கும்படி அறிவித்துள்ளனர்.