திரையரங்கு முன்பு அமர்பவர்களை விட தொலைக்காட்சி முன்பு அமர்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடர் சரவணன் மீனாட்சி. இது தற்போது மூன்றாம் பாகம் வரை வந்து விட்டது.
இதில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் செந்தில்-ஸ்ரீஜா. இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர். எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் ரசிகர்கள் இவர்களை அதிகமாகவே மிஸ் செய்தனர்.
சில வருடம் ஒதுங்கி இருந்த இந்த ஜோடி மீண்டும் அதே தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்கவுள்ளனர். அந்த தொடரின் பர்ஸ்ட்லுக் விரைவில் வெளிவரவுள்ளதாம்.