இந்தியாவில் 5 முதல் 19 வயது வரை உள்ளவர்களில் 6 கோடியே 54 லட்சம் பேர் பாடசாலைக்கே போனது கிடையாது என்று 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்து உள்ளது.
அந்த கணக்கெடுப்பில் வெளியாகி இருக்கும் தகவல்கள் வருமாறு:-
இந்திய மக்கள் தொகையில் 38 கோடியே 1 லட்சம் பேர் 5 முதல் 19 வயது வரை உள்ளவர்கள். இவர்களில் 26 கோடியே 98 லட்சம் பேர் (71 சதவீதம்) கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கிறார்கள். 4 கோடியே 49 லட்சம் பேர் (11.8 சதவீதம்) ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்துக்கு சென்றவர்கள். பின்னர் அவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். 6 கோடியே 54 லட்சம் பேர் (17.2 சதவீதம்) பள்ளிக்கூடத்துக்கே போனது கிடையாது.
5 முதல் 19 வயது வரை உள்ளவர்களில் 65 லட்சத்து 70 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களில் 17 லட்சத்து 50 ஆயிரம் பேர் (26.7 சதவீதம்) பாடசாலைக்கே போகாதவர்கள். 8 லட்சம் பேர் (12.1 சதவீதம்) பாடசாலைப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். 40 லட்சத்து 20 ஆயிரம் பேர் (61.2 சதவீதம்) தொடர்ந்து படித்து வருகிறார்கள்.