என்னமோ ஏதோ, தடையற தாக்க, புத்தகம் போன்ற படங்களில் நடித்த ப்ரீத் சிங் அதற்கு பின்னர் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தினார்.
இவ்வாறு 3 வருடங்களுக்கு முன் சென்றவர் தான் இன்னும் தமிழ் திரையுலக பக்கம் தலைகாட்டவில்லை.
தற்போது விஷாலின் படம் ஒன்றில் நடிக்க பேச்சுக்கள் நடந்தது. எனினும் இதன் பின்னர் நடிக்க ஓகே சொன்ன ப்ரீத் சிங் அதிலிருந்து விலகியுள்ளார். பின்னர் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.
மேலும் இந்த படத்தின் மூலம் தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என அதிக நம்பிக்கையுடன் உள்ளாராம் ப்ரீத் சிங்.
இதில் என்ன சுவாரஷ்யம் எனில் முருகதாஸ் படத்தில் பிகினி உடையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.