உலகமெங்கும் நேற்று வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள ‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்களை பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள `பாகுபலி 2′ படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது.
இந்த நிலையில் முன்பதிவில் ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் படம் குறித்து அறிந்திராத சில ஸ்வாரஸ்ய தகவல்கள்.
* `பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் பிரமாண்டத்துக்கு காரணம் அதில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்கிகள்.
33 நிறுவனங்களில் இவை உருவாக்கப்பட்டன. 70 நிபுணர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
1 லட்சத்து 45 ஆயிரம் பிரேம்கள் இவர்களால் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன.
* ‘பாகுபலி-2’ படத்தை ‘பி.பி.சி’ தொலைக்காட்சி முதன் முறையாக ‘டாக்குமென்டரி’ படமாக தயாரித்து வெளியிடுகிறது.
பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் துல்லியமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
* ‘பாகுபலி’ படத்தில் நடிப்பதற்காக பிரபாஸ், ராணா இருவரும் உடல் எடையை 30 கிலோ வரை அதிகரித்தனர்.
இதற்காக தங்களை 8 மாதங்கள் தயார் செய்தனர். இதற்காக உடற்பயிற்சி செய்தவற்காக பிரபாஸ் அவரது வீட்டில் ரூ. 1.5 கோடி செலவில் ‘ஜிம்’ அமைத்தார்.
* ‘பாகுபலி’ படத்துக்காக ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் 199 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
இந்த படத்தில் இடம்பெறும் பிரமாண்ட செட்டுகளை அமைக்க 150 நாட்கள் ஆகின.
இங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்க வசதி இருந்ததாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.