ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலை அள்ளி இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ளது. 50வது நாளை தாண்டி அமோகமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் சில மாதங்களில் சீன மொழியிலும் வெளியாக இருக்கிறது.
அங்கும் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படும் நிலையில் வசூலில் ரூ. 2000 கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலி பிரபாஸிற்கு போன் செய்து, உங்களிடம் பேச வேண்டும், பாகுபலி 3 தயாரா என்று கேட்க, அதற்கு பிரபாஸ் அம்மாடி யம்மா என்று கூறியுள்ளார்.
பிரபாஸின் ரியாக்ஷன் கேட்டு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.