இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்து ஜாம்பவான் 35 வயதான ரோஜர் பெடரர் அளித்த பேட்டியில், ‘எனது மனைவி மிர்கா தான் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருக்கிறார். அவர் இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு சாதித்து இருக்க முடியாது.
‘இதற்கு மேலும் உங்களுடன் சேர்ந்து டென்னிஸ் பயணத்தை தொடர விரும்பவில்லை’ என்று அவர் எப்போது சொல்கிறாரோ, அந்த கணமே எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் (ஓய்வு) கொள்கிறேன் என்று சொல்லி விடுவேன். அவ்வளவு தான்’ என்றார். பெடரர்-மிர்கா தம்பதிக்கு 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.