சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் குதிப்பார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில அரசியல்வாதிகள் ரஜினியை சீண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சுப்ரமணியன் சுவாமி அதில் குறிப்பிடத்தக்கவர்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினி ஒரு கேசினோவில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட அவர், தற்போது மீண்டும் ரஜினியை விமர்சித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களை காப்பாற்ற கொழும்பு செல்வாரா ரஜினிகாந்த் என சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.