தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 8 தோட்டக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இவரின் மகளும் இவரை போலவே ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் தானாம், இந்தியா-பாகிஸ்தான் படத்தில் இரண்டாவது நாயகிக்கு இவர் தான் டப்பிங் கொடுத்தாராம்.
இவர் பெயர் ஐஸ்வர்யா பாஸ்கர், தற்போது ‘மாணிக்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘அதி மேதாவிகள்’ ஆகிய படங்களுக்கு டப்பிங் கொடுத்து வருகின்றாராம்.