தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் காண்சன் ராஜத்நாத். இவர் நேற்று காலை திடீர் விபத்தால் மரணம் அடைந்துள்ளார்.
இவர் மும்பையில் காலை நடைபயிற்சி செய்வதற்காக தன்னுடைய தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு தென்னை மரம் அவர் மீது விழுந்துள்ளது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்து கேமராவில் பதிவாகியுள்ளது. இவரின் இந்த மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.