சமீப நாட்களாக நடிகர் கமல்ஹாசன் ஊழல் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அதனால் அவருக்கு எதிராக பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்ததோடு அவரை கைது செய்துவிடுவோம் என ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் பலர் மிரட்டினர்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “நான் ஊழலுக்கு எதிரானவன். குறிப்பிட்ட கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வது என் கடமை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“புரட்சியாளர்கள் தோல்வியையும் சாவையும் கண்டு பயப்படமாட்டார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை மிரட்டல் வந்ததால் தான் இப்படி ஒரு ட்விட்டை பதிவிட்டாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.