நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் ஒன்றாக இருக்கும் ஒரு வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2010ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதையடுத்து நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி, சென்னை பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். இந்த வீடியோ காட்சியை காட்டி தங்களிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அந்த வீடியோ நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதில், ஸ்ரீதர், லெனின், ஐய்யப்பன், ஆர்த்தி ராவ் உள்பட பலரை குற்றவாளியாக சேர்த்திருந்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. ரஞ்சிதா சார்பில் வக்கீல் இளையராஜா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.