தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையா தான். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் பேசும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு பள்ளி மாணவன் பற்றி அவர் பேசியதாவது.. “9 மணி ஆனா வீட்டுக்குள்ள உட்காந்துடுறான். படிக்கச்சொல்லி அப்பா கெஞ்சுறாரு. அவன் சொல்றான் ‘பேசாம இருங்க ஓவியாக்கு என்ன ஆகுதுனு நான் பாக்கணும்’, ” என்று கூறியதும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தி ஆதரவு கொடுத்ததை பார்த்து பாப்பையா அசந்து போனார்.