அதுல்யா காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தவர். அதை தொடர்ந்து பல படங்கள் இவருக்கு வரத்தொடங்கியது.
இந்நிலையில் மிகவும் கவனமாக ஏமாலி படத்தை தேர்ந்தெடுத்துள்ளார், பலரும் இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தவுடன் அதுல்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
அது வேறு ஒன்றுமில்லை அதுல்யாவை ஹோம்லியாக பார்த்தவர்கள் இப்படத்தில் செம்ம கிளாமராகவும், சிகரெட் பிடிப்பது போலவும் பார்க்க கொஞ்சம் வருத்தப்பட்டுள்ளனர்.
அதற்கு அதுல்யா கூறுகையில் ‘இந்த கதாபாத்திரம் மிகவும் வலுவானது, மேலும், வெறும் கிளாமர் என்ற அடிப்படையில் நடிக்கவில்லை, படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்’ என்று கூறியுள்ளார்.