சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விழா கொண்டாடப்பட்டது. அதற்கு முன் ஆந்திராவிலும் வெளியான படத்திற்காக படக்குழு அங்கு புரமோஷனுக்கு சென்றது.
ஹைதராபாத்தில் சூர்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க அவர் பேசியிருந்தார். நடிகர்களின் அரசியல் பற்றியும் அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அவரும் பதில் கூறியிருந்தார்.
இதை வைத்து அரசியலுக்கு வரும் நடிகருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என அவர் சொன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது சூர்யா தரப்பு இதை மறுத்துள்ளது. எனக்கு அரசியல் எண்ணம் எதுவும் இல்லை.
அரசியலுக்கு வரும் நடிகர்களில் நான் யாரை ஆதரிக்கிறேன் என இப்போது கருத்து சொல்லமுடியாது என்று தான் சூர்யா கூறியிருந்ததாக அந்த தரப்பு கூறியுள்ளது.